வடகிழக்கு பருவமழை களப்பணியில் தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - தமுமு மாநில செயலாளர் சாதிக் அலி..!

சூயஸ் குடிநீர் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடாததால், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாக குற்றம்சாட்டினார்.


கோவை: வடகிழக்கு பருவமழை களப்பணியில் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தமுமு மாநில செயலாளர் சாதிக் அலி தெரிவித்தார்.

கோவை உக்கடத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மாநில செயலாளர் சாதிக் அலி கூறியதாவது;



சென்னை மழையால் பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. மழை தொடர்பான களப்பணியில், தமிழக முதல்வர் தளபதியின் பணி சிறப்பாக உள்ளது. நேரிடையாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றார். மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்துள்ளார்.

கோவை மாநகரில் 100 வார்டுகளில், கடந்த கால ஆட்சியில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலைகள் போடாததாலும், சூயஸ் குடிநீர் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடாததாலும், மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர் என குற்றம் சாட்டியவர், கோவையில் 6 மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாலாங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

குறிப்பாக, 86வது வார்டில் கழிவுநீர் லாரி அங்கு கழிவுகளை கொட்டுவதால், கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், வைரஸ் நோய், பன்றி காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த கழிவு நீரை இங்கு கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வருகின்றது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமுமுகவை பொறுத்த வரை, இயற்கை சீற்றங்களின் போது, எங்களின் தொண்டர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். 5 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். சென்னையில் 100க்கும் மேற்பட்ட சகோதரர்கள் களப்பணியில் உள்ளனர். கோவையில் களப்பணியாற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, மாவட்ட தலைவர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மற்றும் முஜிப்பூர் ரகுமான், ஆசிக் அலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...