வடகிழக்கு பருவமழை தீவிரம்..! கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க கே. வன்னிய பெருமாள் ஐபிஎஸ் நியமனம்..!

கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அலைபேசி எண்கள் புகார்கள் மற்றும் உதவிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், முன்னேச்சரிகை நடவடிக்கைகளை கண்காணிக்க கே. வன்னிய பெருமாள் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அலைபேசி எண்கள் புகார்கள் மற்றும் உதவிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 11-ந் தேதி வரை மிதமான மழை முதல் அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையமானது அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிகை நடவடிக்கைகளை கண்காணிக்க கே. வன்னிய பெருமாள் ஐபிஎஸ்யை தமிழக அரசு கோவை மாவட்டத்திற்கு நியமித்துள்ளது.

மேலும், கோவை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தனித்தனியாக அலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

கொரோனா, பரவல் தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில் இந்த வடகிழக்கு பருவமழையால் பெரிதும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழையால் கோவை மாவட்ட சாலை எங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நீரில் கழிவு நீர் கலப்பதால் மக்களிடம் நோய் தொற்று பரவும் பயம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு ஏதேனும், புகார்கள் மற்றும் உதவிக்காக, கோவை தெற்கு, கணபதி, அன்னூர் என கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...