கோவை காரமடை அருகே சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 4 கேமராக்கள் - வனத்துறை தகவல்..!

கடந்த வாரம் காரமடை அருகே ஆதி மாதனூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்றுக் குட்டிகளை அடித்துக் கொன்றது.


கோவை: கோவை காரமடை அருகே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கண்காணிக்க 4 புதிய கேமராக்கள் வனத்துறையினரால் பொருத்தப்பட்டது.

கோவை அருகே உள்ள ஆதி மாதனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்றுக் குட்டிகளை அடித்துக் கொன்றது.

மேலும், அதே பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.



இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்:-

கடந்த வாரம் இப்பகுதியில் இரண்டு கன்றுக் குட்டிகள் மற்றும் வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய அந்த பகுதியில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...