கோவை காரமடை அருகே சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 4 கேமராக்கள் - வனத்துறை தகவல்..!

கடந்த வாரம் காரமடை அருகே ஆதி மாதனூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்றுக் குட்டிகளை அடித்துக் கொன்றது.


கோவை: கோவை காரமடை அருகே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கண்காணிக்க 4 புதிய கேமராக்கள் வனத்துறையினரால் பொருத்தப்பட்டது.

கோவை அருகே உள்ள ஆதி மாதனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்றுக் குட்டிகளை அடித்துக் கொன்றது.

மேலும், அதே பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.



இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்:-

கடந்த வாரம் இப்பகுதியில் இரண்டு கன்றுக் குட்டிகள் மற்றும் வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய அந்த பகுதியில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...