கிணத்துக்கடவில் தென்னை நார் கயிறு தயாரிப்பு அதிகரிப்பு- விற்பனை மந்தம்!

தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை போன்ற காரணமாக கடைகளில் தென்னை நார் கயிறு விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் இடத்தில் பண்டல் பண்டலாக தென்னை நார் கயிறு தேக்கம் அடைந்ததால், தொழிலாளர்கள் வேதனை.


கோவை: தென்னை நார் விலை குறைந்தும், கயிறு உற்பத்தி அதிகரித்தும் கடைகளில் விற்பனை மந்தம் ஆனதால் கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை நார் மூலம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்கம், நார் விலை உயர்வு போன்ற காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கயிறு திரிக்கும் தொழில் பாதிப்படைந்த வந்தது.

இந்தநிலையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை மரங்களில் தேங்காய் மகசூல் அதிகரிப்பு காரணமாகத் தென்னை நார் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனால் கயிறு உற்பத்திக்குத் தேவையான தென்னை நார் விலை தற்போது குறைந்து உள்ளது.



இதனால் கயிறு உற்பத்தியைத் தொழிலாளர்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.



ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை போன்ற காரணமாகக் கடைகளில் கயிர் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் இடத்தில் பண்டல் பண்டலாக தென்னை நார் கயிர் தேக்கம் அடைந்துள்ளது.

தென்னை நார் விலை குறைந்தும், கயிறு உற்பத்தி அதிகரித்தும் கடைகளில் விற்பனை மந்தம் ஆனதால் கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது வேதனை அடைந்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...