கிணத்துக்கடவில் தென்னை நார் கயிறு தயாரிப்பு அதிகரிப்பு- விற்பனை மந்தம்!

தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை போன்ற காரணமாக கடைகளில் தென்னை நார் கயிறு விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் இடத்தில் பண்டல் பண்டலாக தென்னை நார் கயிறு தேக்கம் அடைந்ததால், தொழிலாளர்கள் வேதனை.


கோவை: தென்னை நார் விலை குறைந்தும், கயிறு உற்பத்தி அதிகரித்தும் கடைகளில் விற்பனை மந்தம் ஆனதால் கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை நார் மூலம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்கம், நார் விலை உயர்வு போன்ற காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கயிறு திரிக்கும் தொழில் பாதிப்படைந்த வந்தது.

இந்தநிலையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை மரங்களில் தேங்காய் மகசூல் அதிகரிப்பு காரணமாகத் தென்னை நார் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனால் கயிறு உற்பத்திக்குத் தேவையான தென்னை நார் விலை தற்போது குறைந்து உள்ளது.



இதனால் கயிறு உற்பத்தியைத் தொழிலாளர்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.



ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை போன்ற காரணமாகக் கடைகளில் கயிர் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் இடத்தில் பண்டல் பண்டலாக தென்னை நார் கயிர் தேக்கம் அடைந்துள்ளது.

தென்னை நார் விலை குறைந்தும், கயிறு உற்பத்தி அதிகரித்தும் கடைகளில் விற்பனை மந்தம் ஆனதால் கயிறு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது வேதனை அடைந்துள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...