கோவையில் கணவன் கண் முன் விபத்தில் மனைவி பலி!

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மனைவி சசிகலா வயது 40. நேற்று முன்தினம் இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் மாண்டியா பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தரிசனம் முடித்துவிட்டு ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பினார். அப்பொழுது பொன்னான்டம்பாளையம் அருகே வந்தபோது சசிகலா மோட்டார் சைக்கிளிலிருந்து திடீரென தவறிக் கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு தென்னம்பாளையம் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...