கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மனைவி சசிகலா வயது 40. நேற்று முன்தினம் இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் மாண்டியா பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தரிசனம் முடித்துவிட்டு ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பினார். அப்பொழுது பொன்னான்டம்பாளையம் அருகே வந்தபோது சசிகலா மோட்டார் சைக்கிளிலிருந்து திடீரென தவறிக் கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு தென்னம்பாளையம் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மனைவி சசிகலா வயது 40. நேற்று முன்தினம் இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் மாண்டியா பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தரிசனம் முடித்துவிட்டு ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பினார். அப்பொழுது பொன்னான்டம்பாளையம் அருகே வந்தபோது சசிகலா மோட்டார் சைக்கிளிலிருந்து திடீரென தவறிக் கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு தென்னம்பாளையம் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.