கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது விபத்தில் சிக்கி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது விபத்தில் சிக்கி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் 44, இவர் குடும்பத்துடன் காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கார்த்திக் கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
நேற்று வீட்டிலிருந்த அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் 44, இவர் குடும்பத்துடன் காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கார்த்திக் கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
நேற்று வீட்டிலிருந்த அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.