கோவையில் விபத்தில் சிக்கி ஓய்விலிருந்த போலீஸ் ஏட்டு சாவு.!

கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது விபத்தில் சிக்கி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது விபத்தில் சிக்கி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் 44, இவர் குடும்பத்துடன் காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கார்த்திக் கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

நேற்று வீட்டிலிருந்த அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...