திருப்பூரில் தொழில் தொடங்குவதாக கூறி பணமோசடி செய்த குடும்பத்தினர்!

திருப்பூரில் தொழில் தொடங்குவதாக பல்வேறு நபர்களிடம் 3-கோடியே 63-லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் தொழில் தொடங்குவதாக பல்வேறு நபர்களிடம் 3-கோடியே 63-லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வரும் ராக்கம்மாள் என்பவர் தனது கணவர் காசிநாதன் மற்றும் உறவினர்கள் லோகேஷ் குமார், சக்திவேல் ஆகியோருடன் பல்லடத்தில் ரியல் எஸ்டேட், தறி இயந்திரம் வாங்குதல் விற்றல் மற்றும் ஏலச்சீட்டு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில் நடத்தி அப்பகுதியில் பொதுமக்களிடம் சகஜமாகப் பழகி வந்துள்ளனர்.

இதனால் தொழிலை விரிவுபடுத்துவதாக அப்பகுதியில் பல்வேறு நபர்களிடம் சுமார் 3 கோடியே 63 லட்சம் வரை கடன் பெற்று அதைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.



மேலும் நால்வரும் கூட்டாகச் சேர்ந்து தங்களிடம் பெற்ற கடன் தொகையைத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்திருந்தனர்.

அப்போது அலுவலகத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரடியாகப் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...