திருப்பூரில் தொழில் தொடங்குவதாக கூறி பணமோசடி செய்த குடும்பத்தினர்!

திருப்பூரில் தொழில் தொடங்குவதாக பல்வேறு நபர்களிடம் 3-கோடியே 63-லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் தொழில் தொடங்குவதாக பல்வேறு நபர்களிடம் 3-கோடியே 63-லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வரும் ராக்கம்மாள் என்பவர் தனது கணவர் காசிநாதன் மற்றும் உறவினர்கள் லோகேஷ் குமார், சக்திவேல் ஆகியோருடன் பல்லடத்தில் ரியல் எஸ்டேட், தறி இயந்திரம் வாங்குதல் விற்றல் மற்றும் ஏலச்சீட்டு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில் நடத்தி அப்பகுதியில் பொதுமக்களிடம் சகஜமாகப் பழகி வந்துள்ளனர்.

இதனால் தொழிலை விரிவுபடுத்துவதாக அப்பகுதியில் பல்வேறு நபர்களிடம் சுமார் 3 கோடியே 63 லட்சம் வரை கடன் பெற்று அதைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.



மேலும் நால்வரும் கூட்டாகச் சேர்ந்து தங்களிடம் பெற்ற கடன் தொகையைத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்திருந்தனர்.

அப்போது அலுவலகத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரடியாகப் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...