பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு..!

நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மாட்டுச்சந்தை, காந்தி வாரசந்தை, தினசரி காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடம் மூலமாக குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் வருகிறது.

மேலும், மாட்டு சந்தையில் மாடு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக வசூல் செய்தும் ரசீது வழங்குவது இல்லை. காய்கறி சந்தை நுழைவு வாயிலில் பொதுமக்கள், வியாபாரிகள் வரும் இருசக்கரம், நான்கு சக்கரம், லாரி, மினி ஆட்டோ மற்றும் சுங்க வசூலும் அரசு விதிமுறைமீறி கடைகள் அமைக்கப்பட்டும், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் உள்ள இரு கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி நிர்ணயித்த ரூ.1க்கு பதில் ரூ 5 வசூல் செய்கின்றனர்.

நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.

இந்த நிலையில், தனியார் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் மாவட்ட பிரதிநிதி தர்மராஜ் தலைமையில் மனு அளித்தனர்.



இதில் CTC ஆயி மூர்த்தி, திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாணிக்க ராஜ், நவநீத கிருஷ்ணன், தர்மராஜ், கண்ணுச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...