நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மாட்டுச்சந்தை, காந்தி வாரசந்தை, தினசரி காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடம் மூலமாக குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் வருகிறது.
மேலும், மாட்டு சந்தையில் மாடு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக வசூல் செய்தும் ரசீது வழங்குவது இல்லை. காய்கறி சந்தை நுழைவு வாயிலில் பொதுமக்கள், வியாபாரிகள் வரும் இருசக்கரம், நான்கு சக்கரம், லாரி, மினி ஆட்டோ மற்றும் சுங்க வசூலும் அரசு விதிமுறைமீறி கடைகள் அமைக்கப்பட்டும், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் உள்ள இரு கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி நிர்ணயித்த ரூ.1க்கு பதில் ரூ 5 வசூல் செய்கின்றனர்.
நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.
இந்த நிலையில், தனியார் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் மாவட்ட பிரதிநிதி தர்மராஜ் தலைமையில் மனு அளித்தனர்.

இதில் CTC ஆயி மூர்த்தி, திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாணிக்க ராஜ், நவநீத கிருஷ்ணன், தர்மராஜ், கண்ணுச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மாட்டுச்சந்தை, காந்தி வாரசந்தை, தினசரி காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடம் மூலமாக குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் வருகிறது.
மேலும், மாட்டு சந்தையில் மாடு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக வசூல் செய்தும் ரசீது வழங்குவது இல்லை. காய்கறி சந்தை நுழைவு வாயிலில் பொதுமக்கள், வியாபாரிகள் வரும் இருசக்கரம், நான்கு சக்கரம், லாரி, மினி ஆட்டோ மற்றும் சுங்க வசூலும் அரசு விதிமுறைமீறி கடைகள் அமைக்கப்பட்டும், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் உள்ள இரு கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி நிர்ணயித்த ரூ.1க்கு பதில் ரூ 5 வசூல் செய்கின்றனர்.
நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.
இந்த நிலையில், தனியார் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் மாவட்ட பிரதிநிதி தர்மராஜ் தலைமையில் மனு அளித்தனர்.
இதில் CTC ஆயி மூர்த்தி, திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாணிக்க ராஜ், நவநீத கிருஷ்ணன், தர்மராஜ், கண்ணுச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.