பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு..!

நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மாட்டுச்சந்தை, காந்தி வாரசந்தை, தினசரி காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடம் மூலமாக குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் வருகிறது.

மேலும், மாட்டு சந்தையில் மாடு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக வசூல் செய்தும் ரசீது வழங்குவது இல்லை. காய்கறி சந்தை நுழைவு வாயிலில் பொதுமக்கள், வியாபாரிகள் வரும் இருசக்கரம், நான்கு சக்கரம், லாரி, மினி ஆட்டோ மற்றும் சுங்க வசூலும் அரசு விதிமுறைமீறி கடைகள் அமைக்கப்பட்டும், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் உள்ள இரு கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி நிர்ணயித்த ரூ.1க்கு பதில் ரூ 5 வசூல் செய்கின்றனர்.

நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.

இந்த நிலையில், தனியார் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் மாவட்ட பிரதிநிதி தர்மராஜ் தலைமையில் மனு அளித்தனர்.



இதில் CTC ஆயி மூர்த்தி, திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாணிக்க ராஜ், நவநீத கிருஷ்ணன், தர்மராஜ், கண்ணுச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...