கோவையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வைரஸ் காய்ச்சல் மற்றும் நீர் தேக்கத்தால் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், கோவை அரசு மருத்துவமனையில், காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என கோவை அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: மழைக்காலங்களில் பாதுகாப்பற்ற உணவு உட்கொள்வதாலும், அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்த அவர், மழை நீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்று டீன் நிர்மலா எச்சரித்துள்ளார்.
தற்போது, இந்த பருவமழையால் ஒரு நாளுக்கு 3 லிருந்து 6 பேர் வரை வைரஸ் காய்ச்சலுக்கு சிசிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தொடர்ந்து, வரும் நாட்களில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
தேவைப்பட்டால் கூடுதல் அறைகள் துவக்கப்படும். காய்ச்சல் சிகிச்சைக்காக தேவையான மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதா? பரிசோதனை கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
முக்கியமாக, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருத்து உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்,என்று டீன் மருத்துவர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது, இந்த பருவமழையால் ஒரு நாளுக்கு 3 லிருந்து 6 பேர் வரை வைரஸ் காய்ச்சலுக்கு சிசிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தொடர்ந்து, வரும் நாட்களில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
தேவைப்பட்டால் கூடுதல் அறைகள் துவக்கப்படும். காய்ச்சல் சிகிச்சைக்காக தேவையான மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதா? பரிசோதனை கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
முக்கியமாக, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருத்து உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்,என்று டீன் மருத்துவர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.