கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு; சுத்தமான குடிநீர் பருக வேண்டும் - டீன் நிர்மலா தகவல்.

கோவையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வைரஸ் காய்ச்சல் மற்றும் நீர் தேக்கத்தால் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், கோவை அரசு மருத்துவமனையில், காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என கோவை அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


கோவை: மழைக்காலங்களில் பாதுகாப்பற்ற உணவு உட்கொள்வதாலும், அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்த அவர், மழை நீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்று டீன் நிர்மலா எச்சரித்துள்ளார்.

தற்போது, இந்த பருவமழையால் ஒரு நாளுக்கு 3 லிருந்து 6 பேர் வரை வைரஸ் காய்ச்சலுக்கு சிசிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தொடர்ந்து, வரும் நாட்களில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

தேவைப்பட்டால் கூடுதல் அறைகள் துவக்கப்படும். காய்ச்சல் சிகிச்சைக்காக தேவையான மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதா? பரிசோதனை கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

முக்கியமாக, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருத்து உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்,என்று டீன் மருத்துவர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...