கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு; சுத்தமான குடிநீர் பருக வேண்டும் - டீன் நிர்மலா தகவல்.

கோவையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வைரஸ் காய்ச்சல் மற்றும் நீர் தேக்கத்தால் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், கோவை அரசு மருத்துவமனையில், காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என கோவை அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


கோவை: மழைக்காலங்களில் பாதுகாப்பற்ற உணவு உட்கொள்வதாலும், அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்த அவர், மழை நீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்று டீன் நிர்மலா எச்சரித்துள்ளார்.

தற்போது, இந்த பருவமழையால் ஒரு நாளுக்கு 3 லிருந்து 6 பேர் வரை வைரஸ் காய்ச்சலுக்கு சிசிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தொடர்ந்து, வரும் நாட்களில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

தேவைப்பட்டால் கூடுதல் அறைகள் துவக்கப்படும். காய்ச்சல் சிகிச்சைக்காக தேவையான மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதா? பரிசோதனை கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

முக்கியமாக, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருத்து உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்,என்று டீன் மருத்துவர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...