திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் வயது சுமார் 45-முதல் 50- வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
திருப்பூர்: திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு மது அருந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர், மது அருந்திவிட்டு போதையில் அங்கேயே படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தவருக்கும், படுத்திருந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது.
வாகனம் எடுக்க வந்த நபர், கல்லால் தாக்கியதாகவும், அதில் அங்கு படுத்திருந்த நபர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு போலீசார், அங்கிருந்த நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் வயது சுமார் 45 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக, தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகரக் காவல் துணை ஆணையர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.
திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு மது அருந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர், மது அருந்திவிட்டு போதையில் அங்கேயே படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தவருக்கும், படுத்திருந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது.
வாகனம் எடுக்க வந்த நபர், கல்லால் தாக்கியதாகவும், அதில் அங்கு படுத்திருந்த நபர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு போலீசார், அங்கிருந்த நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் வயது சுமார் 45 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக, தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகரக் காவல் துணை ஆணையர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.