தாராபுரம் சாலையில் மதுபான கூடம் அருகே ஒருவர் கொலை... போலீசார் விசாரணை!

திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் வயது சுமார் 45-முதல் 50- வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.


திருப்பூர்: திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு மது அருந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர், மது அருந்திவிட்டு போதையில் அங்கேயே படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தவருக்கும், படுத்திருந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது.

வாகனம் எடுக்க வந்த நபர், கல்லால் தாக்கியதாகவும், அதில் அங்கு படுத்திருந்த நபர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு போலீசார், அங்கிருந்த நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் வயது சுமார் 45 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

இது தொடர்பாக, தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகரக் காவல் துணை ஆணையர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...