கோவை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளது. திடீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக, பல மாதங்களாக இருந்த கோவை குற்றாலம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. இதனால், கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், சிறுவாணி நீர்பிடிப்பு பகுகளில் கனமழை பெய்ததால், அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் 10-ந் தேதி முதல் கோவை குற்றாலம்4 நாட்கள் மூடப்பட்டது. அதன்பிறகு, நீர் வரத்து ஓரளவு குறைந்ததால், மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு மழை பரவலாக பெய்து வருவதால், கோவை குற்றால அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது, எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என
வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா காரணமாக, பல மாதங்களாக இருந்த கோவை குற்றாலம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. இதனால், கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், சிறுவாணி நீர்பிடிப்பு பகுகளில் கனமழை பெய்ததால், அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் 10-ந் தேதி முதல் கோவை குற்றாலம்4 நாட்கள் மூடப்பட்டது. அதன்பிறகு, நீர் வரத்து ஓரளவு குறைந்ததால், மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு மழை பரவலாக பெய்து வருவதால், கோவை குற்றால அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது, எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என
வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது