கோவை பெ.நா.பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு அருகிலுள்ள CRPF கேம்பஸ் பகுதிக்குள் வந்த ஆண் யானை மழையினால் பள்ளத்திற்குள் வழுக்கி விழுந்தது.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு, நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று அருகிலுள்ள CRPF கேம்பஸ் பகுதிக்குள் வந்த ஒரு இளம் வயது ஆண் யானை ஒன்று மழையினால் பள்ளத்திற்குள் வழுக்கி விழுந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த, பெ.நா.பாளையம் வனச்சரக களப் பணியாளர்கள் உடனடியாக சென்று, பொக்லைன் உதவியுடன்,பள்ளத்தை சீர்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர்,முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர், வெற்றிவேல் ஆகியோர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். இயந்திர உதவியால், யானை தானாக எழுந்து புதர் பகுதிக்குள் சென்றது.
யானையை கண்காணித்த வனத்துறையினர், யானை தற்போது நன்றாக உள்ளதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து வருகிறது எனவும் தொடர்ந்து வன களப்பணியாளர்கள் தொலைவில் இருந்து யானையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த, பெ.நா.பாளையம் வனச்சரக களப் பணியாளர்கள் உடனடியாக சென்று, பொக்லைன் உதவியுடன்,பள்ளத்தை சீர்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர்,முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர், வெற்றிவேல் ஆகியோர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். இயந்திர உதவியால், யானை தானாக எழுந்து புதர் பகுதிக்குள் சென்றது.
யானையை கண்காணித்த வனத்துறையினர், யானை தற்போது நன்றாக உள்ளதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து வருகிறது எனவும் தொடர்ந்து வன களப்பணியாளர்கள் தொலைவில் இருந்து யானையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.