கோவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரிப்பு..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.


கோவை: கோவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது:-

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் பி.எம். 2.5 எனப்படும் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை குறித்து கடந்த 28-ம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்டது.

கவுண்டம்பாளையத்தில் தீபாவளிக்கு முன்னர் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் 23 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் புதன்கிழமை 157 ஆகவும், தீபாவளி அன்று 250 ஆகவும் அதிகரித்தது.

இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.

பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் அதிகபட்சமாக 100 வரை இருக்கலாம். இதன் மூலம் கோவையில் தீபாவளி அன்று காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசு 55 டெசிபல் வரை இருக்கலாம். வழக்கமாக கவுண்டம்பாளையம் பகுதியில் 62 டெசிபல் வரை இருக்கும் ஒலி மாசு தீபாவளியன்று 73 டெசிபல் ஆகக்கூடியது.

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீபாவளிக்கு முன்னர் 59 டெசிபல்லாக இருந்த ஒலி மாசு தீபாவளி அன்று 64 டெசிபல் ஆக அதிகரித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...