மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.
கோவை: கோவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது:-
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் பி.எம். 2.5 எனப்படும் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை குறித்து கடந்த 28-ம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்டது.
கவுண்டம்பாளையத்தில் தீபாவளிக்கு முன்னர் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் 23 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் புதன்கிழமை 157 ஆகவும், தீபாவளி அன்று 250 ஆகவும் அதிகரித்தது.
இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.
பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் அதிகபட்சமாக 100 வரை இருக்கலாம். இதன் மூலம் கோவையில் தீபாவளி அன்று காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசு 55 டெசிபல் வரை இருக்கலாம். வழக்கமாக கவுண்டம்பாளையம் பகுதியில் 62 டெசிபல் வரை இருக்கும் ஒலி மாசு தீபாவளியன்று 73 டெசிபல் ஆகக்கூடியது.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீபாவளிக்கு முன்னர் 59 டெசிபல்லாக இருந்த ஒலி மாசு தீபாவளி அன்று 64 டெசிபல் ஆக அதிகரித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது:-
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் பி.எம். 2.5 எனப்படும் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை குறித்து கடந்த 28-ம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்டது.
கவுண்டம்பாளையத்தில் தீபாவளிக்கு முன்னர் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் 23 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் புதன்கிழமை 157 ஆகவும், தீபாவளி அன்று 250 ஆகவும் அதிகரித்தது.
இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.
பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் அதிகபட்சமாக 100 வரை இருக்கலாம். இதன் மூலம் கோவையில் தீபாவளி அன்று காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசு 55 டெசிபல் வரை இருக்கலாம். வழக்கமாக கவுண்டம்பாளையம் பகுதியில் 62 டெசிபல் வரை இருக்கும் ஒலி மாசு தீபாவளியன்று 73 டெசிபல் ஆகக்கூடியது.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீபாவளிக்கு முன்னர் 59 டெசிபல்லாக இருந்த ஒலி மாசு தீபாவளி அன்று 64 டெசிபல் ஆக அதிகரித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.