இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை அருகே கல்லுக்குழிகுள் மூழ்கி டிரைவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த கணுவாய் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38) லாரி டிரைவர். இவர் தீபாவளியன்று மதுபோதையில் தனது வீட்டின் அருகில் தண்ணீர் நிரம்பிய கல் குழியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்குள் சென்ற அவர் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அவரது அண்ணன் சீனிவாசன் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்கப் போராடினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கல்லுக்குழிக்குள் இறங்கி தேடினர். சில மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி அன்று கல்லு குழிக்குள் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்த கணுவாய் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38) லாரி டிரைவர். இவர் தீபாவளியன்று மதுபோதையில் தனது வீட்டின் அருகில் தண்ணீர் நிரம்பிய கல் குழியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்குள் சென்ற அவர் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அவரது அண்ணன் சீனிவாசன் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்கப் போராடினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கல்லுக்குழிக்குள் இறங்கி தேடினர். சில மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி அன்று கல்லு குழிக்குள் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.