கோவை அருகே கல்லுக்குழிகுள் மூழ்கி டிரைவர் பரிதாபமாக பலி..!

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை அருகே கல்லுக்குழிகுள் மூழ்கி டிரைவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த கணுவாய் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38) லாரி டிரைவர். இவர் தீபாவளியன்று மதுபோதையில் தனது வீட்டின் அருகில் தண்ணீர் நிரம்பிய கல் குழியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்குள் சென்ற அவர் நீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த அவரது அண்ணன் சீனிவாசன் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்கப் போராடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கல்லுக்குழிக்குள் இறங்கி தேடினர். சில மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி அன்று கல்லு குழிக்குள் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...