காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்தவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூரில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிரைவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (45), ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
தொடர் மழை காரணமாக, ஆழியார் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால், ஆற்றுக்குள் விழுந்த கந்தசாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் ஆனைமலை போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கந்தசாமியை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (45), ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
தொடர் மழை காரணமாக, ஆழியார் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால், ஆற்றுக்குள் விழுந்த கந்தசாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் ஆனைமலை போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கந்தசாமியை தேடி வருகின்றனர்.