பொள்ளாச்சி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிரைவரை தேடும் பணி தீவிரம்..!

காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்தவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூரில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிரைவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (45), ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர் மழை காரணமாக, ஆழியார் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால், ஆற்றுக்குள் விழுந்த கந்தசாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் ஆனைமலை போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கந்தசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...