வால்பாறை அருகே மளிகை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.



கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் மளிகை கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காணப்படும் யானைகளில் இனபெருக்க காலங்களிலும் உணவு அதிகமாக இருக்கும் நேரங்களில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் யானைகள் வருகிறது.



இந்த நிலையில், வால்பாறை அருகே மழுகப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு 7 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து முகமது என்பவர் மளிகை கடையை உடைத்து ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.



 

அதேபோல் அக்காமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அங்குள்ள எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தியது.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...