வால்பாறை அருகே மளிகை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.



கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் மளிகை கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காணப்படும் யானைகளில் இனபெருக்க காலங்களிலும் உணவு அதிகமாக இருக்கும் நேரங்களில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் யானைகள் வருகிறது.



இந்த நிலையில், வால்பாறை அருகே மழுகப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு 7 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து முகமது என்பவர் மளிகை கடையை உடைத்து ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.



 

அதேபோல் அக்காமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அங்குள்ள எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தியது.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...