வால்பாறை அருகே மளிகை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.



கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் மளிகை கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காணப்படும் யானைகளில் இனபெருக்க காலங்களிலும் உணவு அதிகமாக இருக்கும் நேரங்களில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் யானைகள் வருகிறது.



இந்த நிலையில், வால்பாறை அருகே மழுகப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு 7 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து முகமது என்பவர் மளிகை கடையை உடைத்து ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.



 

அதேபோல் அக்காமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அங்குள்ள எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தியது.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...