கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தோழியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தோழியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அஸ்வதி(21) பி.காம்., பட்டதாரி. இவர், தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் ஜெகனுடன் (29), அஸ்வதி நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இந்த விஷயம் அறிந்து அந்த நபரை, மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், அஸ்வதி நேற்று அவரது வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்தார்.
அவரது கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. சாய்பாபா காலனி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், காதல் விவகாரத்தில், அஸ்வதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
நேற்று மாலை நீலகிரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த, ஜெகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அஸ்வதி(21) பி.காம்., பட்டதாரி. இவர், தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் ஜெகனுடன் (29), அஸ்வதி நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இந்த விஷயம் அறிந்து அந்த நபரை, மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், அஸ்வதி நேற்று அவரது வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்தார்.
அவரது கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. சாய்பாபா காலனி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், காதல் விவகாரத்தில், அஸ்வதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
நேற்று மாலை நீலகிரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த, ஜெகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.