நீலகிரியில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மீது தாக்குதல்!

நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி மது போதையில் தீபாவளியன்று அடுத்த வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி மது போதையில் தீபாவளியன்று அடுத்த வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பியாக இருந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினார்.

இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னாள் அதிமுக எம்பி கோபாலகிருஷணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர்கள் முன்னாள் எம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வீட்டுக்குள் ஆடையின்றி இருப்பதை அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அதிமுக எம்பி தன்னை தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீதும் அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...