நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி மது போதையில் தீபாவளியன்று அடுத்த வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி மது போதையில் தீபாவளியன்று அடுத்த வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பியாக இருந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினார்.
இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னாள் அதிமுக எம்பி கோபாலகிருஷணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர்கள் முன்னாள் எம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வீட்டுக்குள் ஆடையின்றி இருப்பதை அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அதிமுக எம்பி தன்னை தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீதும் அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.