வால்பாறையில் பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் மின் கசிவு மின்சாரம் துண்டிப்பு!

வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.


கோவை: வால்பாறையிலுள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும், வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில், மழையும் பெய்தது அந்த சமயத்தில் வால்பாறையில் உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார துறையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு மின் கம்பிகளில் எரிந்த தீயை அணைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் 12-குடியிருப்புகள் கொண்ட அந்த குடியிருப்பில் ஏ-பிளாக்கில் உள்ள ஆறு வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த குடியிருப்பு கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் தெருவிளக்கு, மின்கம்பிகள் பராமரிப்பு எதுவும் செய்வதில்லை என்றும், குடியிருப்பைச் சுற்றிலும் அடர்ந்த முட்புதர்கள் இருப்பதால் சிறுத்தைப்புலியின் வாழ்விடமாக திகழ்ந்து வரும் நிலையில், அதை அகற்றும் பணியும் செய்வதில்லை என்றும் இதுபோன்ற நிலை நீடிக்காமல் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...