வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கோவை: வால்பாறையிலுள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும், வெகு சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிலையில், மழையும் பெய்தது அந்த சமயத்தில் வால்பாறையில் உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார துறையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு மின் கம்பிகளில் எரிந்த தீயை அணைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் 12-குடியிருப்புகள் கொண்ட அந்த குடியிருப்பில் ஏ-பிளாக்கில் உள்ள ஆறு வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த குடியிருப்பு கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் தெருவிளக்கு, மின்கம்பிகள் பராமரிப்பு எதுவும் செய்வதில்லை என்றும், குடியிருப்பைச் சுற்றிலும் அடர்ந்த முட்புதர்கள் இருப்பதால் சிறுத்தைப்புலியின் வாழ்விடமாக திகழ்ந்து வரும் நிலையில், அதை அகற்றும் பணியும் செய்வதில்லை என்றும் இதுபோன்ற நிலை நீடிக்காமல் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும், வெகு சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிலையில், மழையும் பெய்தது அந்த சமயத்தில் வால்பாறையில் உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார துறையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு மின் கம்பிகளில் எரிந்த தீயை அணைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் 12-குடியிருப்புகள் கொண்ட அந்த குடியிருப்பில் ஏ-பிளாக்கில் உள்ள ஆறு வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த குடியிருப்பு கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் தெருவிளக்கு, மின்கம்பிகள் பராமரிப்பு எதுவும் செய்வதில்லை என்றும், குடியிருப்பைச் சுற்றிலும் அடர்ந்த முட்புதர்கள் இருப்பதால் சிறுத்தைப்புலியின் வாழ்விடமாக திகழ்ந்து வரும் நிலையில், அதை அகற்றும் பணியும் செய்வதில்லை என்றும் இதுபோன்ற நிலை நீடிக்காமல் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.