கோவை சாய்பாபா காலனி பகுதியில் வாகை மரம் நேற்று இரவு சாய்ந்ததில் ஒரு கார் சேதம் அடைந்தது.
கோவை: நேற்று கோவையில் பெய்த மழையில், இரவு 8.30 மணியளவில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பார்க் சாலையில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே இருந்த வாகை மரம் சாய்ந்தது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்ட கார் மீது மரம் விழுந்துள்ளது. காரில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனிகாவல் துறையினர், போக்குவரத்தை உடனடியாக சீர்ப்படுதினர்.

மேலும், சாய்ந்த மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என 15 க்கும் மேற்பட்டோர், அரை மணி நேரத்திற்கும் மேலாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனிகாவல் துறையினர், போக்குவரத்தை உடனடியாக சீர்ப்படுதினர்.
மேலும், சாய்ந்த மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என 15 க்கும் மேற்பட்டோர், அரை மணி நேரத்திற்கும் மேலாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.