கோவை சாய்பாபா காலணி பகுதியில் சாலையில் நிறுத்தியிருந்த கார் மீது மரம் சாய்ந்தது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் வாகை மரம் நேற்று இரவு சாய்ந்ததில் ஒரு கார் சேதம் அடைந்தது.


கோவை: நேற்று கோவையில் பெய்த மழையில், இரவு 8.30 மணியளவில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பார்க் சாலையில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே இருந்த வாகை மரம் சாய்ந்தது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்ட கார் மீது மரம் விழுந்துள்ளது. காரில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனிகாவல் துறையினர், போக்குவரத்தை உடனடியாக சீர்ப்படுதினர்.



மேலும், சாய்ந்த மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என 15 க்கும் மேற்பட்டோர், அரை மணி நேரத்திற்கும் மேலாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...