தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தார்.
கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின தலைமை அலுவலகத்தில் நரகாசூரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் மூதாதையரான நரகாசுரன் இறப்பு கொண்டாடப்படக்கூடிய விழா அல்ல எனவும், வீர வணக்கம் செலுத்தக்கூடிய நாள் என குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் வம்சாவளி வந்த மன்னனின் இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் நாளை தமிழர்களே வெடி வைத்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடக் கூடாது என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும், தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாட்டுக்கறி பிரியாணியை அனைவருக்கும் வழங்கினர்.