கோவையில் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தார்.



கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின தலைமை அலுவலகத்தில் நரகாசூரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் மூதாதையரான நரகாசுரன் இறப்பு கொண்டாடப்படக்கூடிய விழா அல்ல எனவும், வீர வணக்கம் செலுத்தக்கூடிய நாள் என குறிப்பிட்டார்.



மேலும் தமிழ் வம்சாவளி வந்த மன்னனின் இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் நாளை தமிழர்களே வெடி வைத்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடக் கூடாது என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வலியுறுத்தினார்.



ஆண்டுதோறும், தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாட்டுக்கறி பிரியாணியை அனைவருக்கும் வழங்கினர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...