கோவையில் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தார்.



கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின தலைமை அலுவலகத்தில் நரகாசூரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் மூதாதையரான நரகாசுரன் இறப்பு கொண்டாடப்படக்கூடிய விழா அல்ல எனவும், வீர வணக்கம் செலுத்தக்கூடிய நாள் என குறிப்பிட்டார்.



மேலும் தமிழ் வம்சாவளி வந்த மன்னனின் இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் நாளை தமிழர்களே வெடி வைத்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடக் கூடாது என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வலியுறுத்தினார்.



ஆண்டுதோறும், தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாட்டுக்கறி பிரியாணியை அனைவருக்கும் வழங்கினர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...