கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலி!

கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் தொடர்பாக, பந்தய சாலை காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் தொடர்பாக, பந்தய சாலை காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச்சேர்ந்தவர்கள் பார்த்தீபன்(31), சக்திவேல்(60) முருகானந்தம்(55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தென்காசியை சேர்ந்த முருகானந்தம் இப்பகுதியில் தங்கி சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். நண்பர்களான மூவரும் நேற்று தீபாவளி கொண்டாடுவதற்காக மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் 6.30-மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். இதனையடுத்து, அருந்ததியர் வீதியிலுள்ள, பட்டத்தரசியம்மன் கோவில் எதிரே இருக்கும், பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3- பேரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் சக்திவேல் தனது வீட்டுக்குச் செல்ல கோவிலின் பின்புறம் வந்தவர், கீழே உட்கார்ந்தவர் இறந்துவிட்டார். இவரை தொடர்ந்து பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் இறந்துள்ளார்.

இருவரது உடல்களும் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், பார்த்தீபன் தனது வீட்டருகே இறந்துள்ளார். பின்னர் அவரது உடலும் பிரேதப்பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியில் உள்ள தடயங்களை எடுத்துச் சென்றனர்.



பந்தய சாலை காவல்துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...