கோவையில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!

கீரநத்தத்தில் தனது பெற்றோர் திட்டியதால் 4-வது மாடியிலிருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகே தனது பெற்றோர்கள் திட்டியதால் 4-வது மாடியிலிருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கீர நத்தத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மகன் சரண் வயது 18, இவர் மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரவணனின் வீட்டிற்கு அவரது சகோதரி தனது 4 வயது பெண் குழந்தை உடன் வந்திருந்தார். குழந்தையை அழைத்துக்கொண்டு சரண் கடைக்குச் சென்று திரும்பினார்.

இதை அவரது பாட்டி கண்டித்தார். இதைத் தொடர்ந்து பாட்டி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர்களும் அவரை கண்டித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்து கோபமடைந்த சரண் மாடியில் அமர்ந்திருந்தார். பிறகு நாலாவது மாடிக்கு சென்று மேலே இருந்து கீழே திடீரென குதித்தார். உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...