கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு 24-மணி நேரமும் செயல்படும் -டீன் நிர்மலா தகவல்!

தீக்காய சிறப்பு வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என டீன் தகவல்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு தீபாவளி பண்டிகையையொட்டி 24-மணி நேரமும் செயல்படும் என டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவின் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

இது போன்ற வெடி விபத்துக்களில் தீக்காயம் ஏற்படும் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீக்காயம் ஏற்பட்டு வரும் நபர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-

தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ காயத்திற்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் தீக்காயத்திற்குச் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 20-படுக்கை வசதிகள் இருக்கும். தீக்காயத்துடன் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி டாக்டர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று முதல் பணியில் இருப்பார்கள் இந்த வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். காய மேற்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...