தீக்காய சிறப்பு வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என டீன் தகவல்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு தீபாவளி பண்டிகையையொட்டி 24-மணி நேரமும் செயல்படும் என டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவின் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இது போன்ற வெடி விபத்துக்களில் தீக்காயம் ஏற்படும் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீக்காயம் ஏற்பட்டு வரும் நபர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-
தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ காயத்திற்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் தீக்காயத்திற்குச் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 20-படுக்கை வசதிகள் இருக்கும். தீக்காயத்துடன் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி டாக்டர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று முதல் பணியில் இருப்பார்கள் இந்த வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். காய மேற்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவின் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இது போன்ற வெடி விபத்துக்களில் தீக்காயம் ஏற்படும் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீக்காயம் ஏற்பட்டு வரும் நபர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-
தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ காயத்திற்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் தீக்காயத்திற்குச் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 20-படுக்கை வசதிகள் இருக்கும். தீக்காயத்துடன் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி டாக்டர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று முதல் பணியில் இருப்பார்கள் இந்த வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். காய மேற்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.