கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை: மலைவாழ் கிராம மக்களுடன் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினார்.
கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் உள்ள சுமார் 20 மலைவாழ் குடும்பங்களுக்குத் தீபாவளி பண்டிகை விழாவையொட்டி இனிப்புகள், சேலை, வேட்டி, மற்றும் போர்வை ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

இவ்விழாவைத் தொடர்ந்து சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வைத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.
பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் உள்ள சுமார் 20 மலைவாழ் குடும்பங்களுக்குத் தீபாவளி பண்டிகை விழாவையொட்டி இனிப்புகள், சேலை, வேட்டி, மற்றும் போர்வை ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.
இவ்விழாவைத் தொடர்ந்து சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வைத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.
பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.