மாநகராட்சி ஆணையாளர் தலைமையில்‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 14-பேர்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ திரு.ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று 03.11.2021 நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 14 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்களிடம்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.



இதில்‌ சொத்துவரி விதிப்பு, காலியிட வரிவிதிப்பு, சொத்துவரி பெயர்‌ மாற்றம்‌, தொழில்‌ வரி விதித்தல்‌, தொழில்‌ உரிமம்‌ வழங்குதல்‌, பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குதல்‌ மற்றும்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை அளித்தனர்‌.

இன்றைய குறைதீர் கூட்டத்தில்‌ மாநகராட்சி பொறியியல்‌ பிரிவிற்கு 3 மனுக்களும்‌, வருவாய்‌ பிரிவிற்கு 4 மனுக்களும்‌, நகரமைப்பு பிரிவிற்கு 3 மனுக்களும்‌, சுகாதாரப்‌ பிரிவிற்கு 2 மனுக்களும்‌, பொதுப் பிரிவிற்கு 2 மனுக்களும்‌ என மொத்தம்‌ 14 மனுக்கள்‌ பெறப்பட்டது.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ இம்மனுக்களின்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, ஒவ்வொரு வாரமும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல அலுவலகங்களில்‌ புதன்கிழமையன்று‌, மத்திய மண்டலத்தில்‌ வெள்ளிக்கிழமையன்று‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ நடைபெறும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள்‌ கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌ எனவும்‌ குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும்‌ பொதுமக்களின்‌ கோரிக்கைகள்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில்‌ கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...