திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க திருப்பூர் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாகத் திருப்பூர் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் - புதுமார்கெட் வீதியில், தீபாவளி பண்டிகைக்குத் தேவையான ஆடைகள், பேன்சி ஆபரணங்கள், இனிப்பு மற்றும் பட்டாசு வகைகள் வாங்கப் பொதுமக்கள் அதிகளவில் வந்த வண்ணமுள்ளனர்.

திருப்பூர் பொறுத்தவரை பனியன் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள பகுதி என்பதால் தொழிலாளர்களுக்குக் கடந்த சில நாட்களாகத் தீபாவளி போனசனாது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மிசின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக, புதுமார்க்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமும், வாகன வரத்தும் அதிகளவில் உள்ளது. இதனால் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஏராளமான காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...