திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க திருப்பூர் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாகத் திருப்பூர் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் - புதுமார்கெட் வீதியில், தீபாவளி பண்டிகைக்குத் தேவையான ஆடைகள், பேன்சி ஆபரணங்கள், இனிப்பு மற்றும் பட்டாசு வகைகள் வாங்கப் பொதுமக்கள் அதிகளவில் வந்த வண்ணமுள்ளனர்.

திருப்பூர் பொறுத்தவரை பனியன் நிறுவனங்கள் அதிகளவில் உள்ள பகுதி என்பதால் தொழிலாளர்களுக்குக் கடந்த சில நாட்களாகத் தீபாவளி போனசனாது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மிசின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக, புதுமார்க்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமும், வாகன வரத்தும் அதிகளவில் உள்ளது. இதனால் குமரன் சாலை, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஏராளமான காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...