கோவை பழைய கார் குடோன் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்துச் செயல்பட்டதா? அதிகாரிகள் விசாரணை.!!

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய கார் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே, அந்த குடோன் உள்ள இடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழைய கார் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே, அந்த குடோன் உள்ள இடம் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இப்பகுதியில், குடியிருப்புகள் நடுவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான பழைய கார் குடோன் செயல்பட்டு வருகிறது.

இங்கு, பழைய கார்களின் உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பழைய கார்கள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தவிர, பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள், கழிவுகள் அனைத்தும் ஒரு இடத்தில் மொத்தமாகக் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த பழைய கார் குடோன் தீ பிடித்தது. 



இந்த தீ விபத்தில் பழைய கார்கள், அதன் உதிரி பாகங்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கார் குடோன் அமைக்கப்பட்ட இடம் ஸ்கீம் சாலைக்கான இடம். மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம். இந்த இடம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், நடந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அந்த குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் விரைவில் வழங்கப்பட உள்ளது.

மேலும் அப்பகுதிகளில் இது போன்ற இடங்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் உள்ளனவா என கண்டறிந்து அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...