கோவையில் திமுக 100-நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்.!!

கிணத்துக்கடவில் திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் திமுக ஆட்சியின் 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.


கோவை :கிணத்துக்கடவு திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் திமுக ஆட்சியின் 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடங்கி 100- நாட்களில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியின் 100- நாள் சாதனையை திமுகவினர் மக்களிடையே தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு திமுக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் திமுக ஆட்சி 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வருகின்றனர்.



இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர், எஸ்.எம்.பி.நகர் பகுதியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் வீடு வீடாக சென்று திமுக அரசின் 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இனிப்புகள் வழங்கினர்.

மேலும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து அதிலுள்ள பயன்களை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதில், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கணேஷ், மணிகண்டன், ஈஸ்வரன், லட்சுமணன், மிசா சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...