கோவையில் மளிகைக்கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து செயின் பறிப்பு.!!

மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரக்கூடிய பெண் உரிமையாளரிடம் மர்ம நபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள எம்.எஸ். காலனி சேர்ந்தவர் செல்வக்குமார் இவரது மனைவி தனலட்சுமி வயது 32. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று கடையிலிருந்தபோது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் வந்து சிகரெட் கேட்டனர் அவர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலட்சுமி கழுத்திலிருந்த 5- அரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...