கோவையில் மளிகைக்கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து செயின் பறிப்பு.!!

மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரக்கூடிய பெண் உரிமையாளரிடம் மர்ம நபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள எம்.எஸ். காலனி சேர்ந்தவர் செல்வக்குமார் இவரது மனைவி தனலட்சுமி வயது 32. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று கடையிலிருந்தபோது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் வந்து சிகரெட் கேட்டனர் அவர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலட்சுமி கழுத்திலிருந்த 5- அரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...