மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: மளிகைக் கடை பெண் உரிமையாளரிடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரக்கூடிய பெண் உரிமையாளரிடம் மர்ம நபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள எம்.எஸ். காலனி சேர்ந்தவர் செல்வக்குமார் இவரது மனைவி தனலட்சுமி வயது 32. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று கடையிலிருந்தபோது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் வந்து சிகரெட் கேட்டனர் அவர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலட்சுமி கழுத்திலிருந்த 5- அரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரக்கூடிய பெண் உரிமையாளரிடம் மர்ம நபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள எம்.எஸ். காலனி சேர்ந்தவர் செல்வக்குமார் இவரது மனைவி தனலட்சுமி வயது 32. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று கடையிலிருந்தபோது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் வந்து சிகரெட் கேட்டனர் அவர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலட்சுமி கழுத்திலிருந்த 5- அரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.