வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு..!

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை தொடர்பாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை தொடர்பாகவும் மனு அளிக்கப்பட்டது.


கோவை: நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை சம்பந்தமாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை சம்பந்தமாகவும், தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களை அவரது சென்னை முகாம் இல்லத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் அவர்களுடைய தலைமையில், வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், உடன் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கோழிக்கடை கணேசன், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் GKM. மகுடீஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே. வீரமணி, வழக்கறிஞர் விஸ்வநாதன், மார்க்கெட் கடை வியாபாரிகள் சங்க தலைவர் Sp. சிவா, வடை கடை குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...