வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை தொடர்பாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை தொடர்பாகவும் மனு அளிக்கப்பட்டது.
கோவை: நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை சம்பந்தமாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை சம்பந்தமாகவும், தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களை அவரது சென்னை முகாம் இல்லத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் அவர்களுடைய தலைமையில், வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், உடன் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கோழிக்கடை கணேசன், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் GKM. மகுடீஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே. வீரமணி, வழக்கறிஞர் விஸ்வநாதன், மார்க்கெட் கடை வியாபாரிகள் சங்க தலைவர் Sp. சிவா, வடை கடை குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சனை சம்பந்தமாகவும், ஒப்பந்ததாரர்கள் பிரச்சனை சம்பந்தமாகவும், தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களை அவரது சென்னை முகாம் இல்லத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் அவர்களுடைய தலைமையில், வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், உடன் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கோழிக்கடை கணேசன், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் GKM. மகுடீஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே. வீரமணி, வழக்கறிஞர் விஸ்வநாதன், மார்க்கெட் கடை வியாபாரிகள் சங்க தலைவர் Sp. சிவா, வடை கடை குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.