வால்பாறையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறை ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு.!!

வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


வால்பாறை: வால்பாறை வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறை ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாகும், நேற்று இரவு வால்பாறையிலிருந்து அக்கா மலைக்குச் செல்லும் வழியில் உள்ள பாலாஜி நகரில் அரசு பேருந்து செல்லும் போது பேருந்திலிருந்த பயணிகள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியே வந்த சிறுத்தையைக் குட்டி சாலையில் செல்வதைக் கண்டனர்.

இரவு நேரம் என்பதால் பயணிகள் வனத்துறை ஊழியர் முத்துராஜ் என்பவருக்குத் தகவல் அளித்ததன் பேரில் வந்த முத்துராஜ் சாலையிலிருந்த சிறுத்தை குட்டியை மீட்டு அடர் வனப் பகுதிக்குச் சென்று குட்டியை விட்டுள்ளார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...