வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வால்பாறை: வால்பாறை வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறை ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாகும், நேற்று இரவு வால்பாறையிலிருந்து அக்கா மலைக்குச் செல்லும் வழியில் உள்ள பாலாஜி நகரில் அரசு பேருந்து செல்லும் போது பேருந்திலிருந்த பயணிகள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியே வந்த சிறுத்தையைக் குட்டி சாலையில் செல்வதைக் கண்டனர்.
இரவு நேரம் என்பதால் பயணிகள் வனத்துறை ஊழியர் முத்துராஜ் என்பவருக்குத் தகவல் அளித்ததன் பேரில் வந்த முத்துராஜ் சாலையிலிருந்த சிறுத்தை குட்டியை மீட்டு அடர் வனப் பகுதிக்குச் சென்று குட்டியை விட்டுள்ளார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாகும், நேற்று இரவு வால்பாறையிலிருந்து அக்கா மலைக்குச் செல்லும் வழியில் உள்ள பாலாஜி நகரில் அரசு பேருந்து செல்லும் போது பேருந்திலிருந்த பயணிகள் தேயிலைத் தோட்டத்தை விட்டு வெளியே வந்த சிறுத்தையைக் குட்டி சாலையில் செல்வதைக் கண்டனர்.
இரவு நேரம் என்பதால் பயணிகள் வனத்துறை ஊழியர் முத்துராஜ் என்பவருக்குத் தகவல் அளித்ததன் பேரில் வந்த முத்துராஜ் சாலையிலிருந்த சிறுத்தை குட்டியை மீட்டு அடர் வனப் பகுதிக்குச் சென்று குட்டியை விட்டுள்ளார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவு நேரத்தில் கொண்டு சென்ற வனத்துறை ஊழியருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.