கோவையில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பத்திரிக்கையாளர் மற்றும் வியாபாரிக்கு குவியும் பாராட்டுகள்..!!

அந்த ஆசாமியிடம் இருந்து இரும்பு ராடு, கத்தி போன்ற கூர்மையான இரும்பு கம்பி பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பத்திரிக்கையாளர் மற்றும் வியாபாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை நீலாம்பூர் பகுதியில் வசிப்பவர் சித்திக் (32). இவர் சித்ரா ஜங்ஷனில் கம்ப்யூட்டர் சேல்ஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். இது அவரது செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 4 மணி அளவில் சித்திக் தனது செல்போனை பார்த்தார். அவரது கடைக்குள் ஒரு ஆசாமி நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, உடனடியாக அதே பகுதியில் வசிக்கும், தனது நண்பரான, பிரபல ஆங்கில பத்திரிக்கை நிருபர் வில்சன் என்பவருடன் தொடர்பு கொண்டார். இவர்கள் இருவரும் காரில் சித்ரா வந்தனர்.

அப்போது அந்த ஆசாமி கடைக்குள் பணம் எதுவும் கிடைக்காததால் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு பஸ்சில் ஏறினார். இதைப்பார்த்த சித்திக்கும் வில்சனும் அவரை அடையாளம் கண்டு, காரை நிறுத்திவிட்டு அதே பேருந்தில் அவர்களும் ஏறினார்கள்.

பின்னர், பேருந்தில் வைத்து அந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த ஆசாமி தான் வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தால் அவர்களை தாக்க முயன்றார். இருவரும் சேர்ந்து அந்த ஆசாமியை மடக்கிப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் அந்த ஆசாமி தனது பெயரை சரவணன் என்று கூறியுள்ளான். அவரிடம் இருந்து இரும்பு ராடு, கத்தி போன்ற கூர்மையான இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே, கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பத்திரிக்கையாளர் வில்சன், வியாபாரி சித்திக் ஆகியோரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...