மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில், விண்ணப்பங்கள் ஜூன் 25-க்குள் வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த விருதுகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

தனிநபர் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய சிறந்த மருத்துவர், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மாநில விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் ஜூன் 25, 2026-க்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன் 25 மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கோவைமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 அல்லது 94999 33471 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...