குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுவதாகவும், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கோவை: கோவை ஜி எம் நகர் கோட்டை புதூர் அருகே வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோயம்புத்தூர் சிங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டு, ஜி எம் நகர் கோட்டை புதூர் பின்புறம் உள்ள பகுதியில் வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், இறந்து கிடக்கும் நாய்கள், குப்பைகள் என அனைத்தும் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது.

மேலும், அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகளும் இல்லை. குப்பைகளை அப்புறப்படுத்துவதும் இல்லை. பல மாதங்களாக அப்பகுதியில் இதே நிலை தொடர்ந்து வருகின்றது.

இதன் காரணமாக கொசுத் தொல்லை மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று குற்றம்சாட்டினர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோயம்புத்தூர் சிங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டு, ஜி எம் நகர் கோட்டை புதூர் பின்புறம் உள்ள பகுதியில் வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், இறந்து கிடக்கும் நாய்கள், குப்பைகள் என அனைத்தும் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது.
மேலும், அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகளும் இல்லை. குப்பைகளை அப்புறப்படுத்துவதும் இல்லை. பல மாதங்களாக அப்பகுதியில் இதே நிலை தொடர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக கொசுத் தொல்லை மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று குற்றம்சாட்டினர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.